நிதி முறைக்கேடுகள் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அதிகம் இடம்பெறும் நாடுகளை உள்ளடக்கிய கருப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பிற்கு அமைய இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பணச்சலவை மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அதிகம் இடம்பெறுவதாக குற்றம்சாட்;டப்பட்டு, இலங்கை, டியூனீசியா, ட்ரினேட் மற்றும் டொபாகோ குடியரசு ஆகிய நாடுகளை குறித்த கறுப்பு பட்டியலில் இணைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
அதற்கமைய இதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போது, குறித்த பரிந்துரைக்கு ஆதரவாக 375 பேரும், எதிராக 283 பேரும் வாக்களித்துள்ளனர்.
அதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி முறைக்கேடுகள் குறித்த கருப்பு பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது.