பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக சனிக்கிழமை முடிவடைந்தது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை ஆரவ், சினேகன், கணேஷ் மற்றும் ஹரிஷ் தான் இருந்தனர். இந்த நால்வரில் ஆரவ் பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 வருவதாகவும் அதில் பிரபல தொகுபபாளினி டிடி, மாப்பிள்ளை சீரியல் புகழ் ஸ்ரீஜா, தெய்வமகள் புகழ் கிருஷ்ணா, கலக்க போவது யாரு பாலா, தொடை அழகி நடிகை ரம்பா, சரவணன் மீனாட்சி புகழ் ரியோ கலந்து கொள்கின்றனர்.மேலும் ரச்சிதா, காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி, நடிகை சினேகா, கலக்க போவது யாரு கதிர், நடிகை ரியமிக்கா, மைனா நந்தினி, மற்றும் பிரபல வில்லன் ரியாஸ் இவர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தான் தொகுத்து வழங்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கமல் அரசியலில் சற்று பிஸி ஆகிவிட்டதால், இந்த நிகழ்ச்சி சூர்யாவிற்கு சென்றதாக பேசப்பட்டு வருகிறது.