கனடா மாணவர் கடன் பெறுபவர்களிற்கு புதிய இடைவேளை!
நவம்பர் 1ம் திகதி தொடக்கம் வருடமொன்றுக்கு குறைந்தது 25,000டொலர்களை உழைக்கும் வரை கனடியார்கள் அவர்களது கனடா மாணவர் கடனை மீள செலுத்த தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கம் சமீபத்திய இரண்டாம் நிலை பட்டதாரிகள் அவர்களது மாணவர் கடன்களை சமாளிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
நவம்பர் 1ம் திகதி தொடக்கம் வருடமொன்றுக்கு குறைந்தது 25,000டொலர்களை உழைக்கும் வரை கனடியார்கள் அவர்களது கனடா மாணவர் கடனை மீள செலுத்த தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது வருமானம் மற்றும் குடும்ப அளவு போன்றனவற்றை அடிப்படையாக கொண்டு தங்கள் கடனை சாமளிக்க மாணவர்கள் உதவியை நாடலாம்.
கடன் பெறுபவர்கள் மாதாந்த கடன் தொகையை குறைக்க அல்லது முற்றாக நீக்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் எதிர்கால வளம் வேலை சந்தையில் இளம் கனடியார்கள் சிறந்த கல்வி மற்றும் பயிற்சிகளை பெறுவதில் அமைந்துள்ளதென வேலைவாய்ப்பு அமைச்சர் மேரிஆன் மைகிசக் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமான குடும்பங்களை சார்ந்த முழு நேர மாணவர்கள் வருடமொன்றிற்கு 2,000 டொலர்கள் முதல் 3,000 டொலர்கள் வரை ஆதரவு தொகை பெறலாம். நடுத்தர வருமானம் பெறும் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் 800 டொலர்கள் முதல் 1,200 டொலர்கள் வரையும் பகுதி நேர குறைந்த வருமான குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் 1,200 டொலர்கள் முதல் 1,800 டொலர்கள் வரை நிதி உதவி பெறலாம். கனடா மாணவர் கிராண்ட் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2013 தொடக்கம் 2014 வரை கிட்டத்தட்ட 750,000மாணவர்கள் கனடா மாணவர் கடனை திரும்ப செலுத்தும் உதவித் திட்டத்தினால் நன்மையடைந்து உள்ளனர்.
கடன்சுமையால் அவதிப்படும் மாணவர்கள் எத்தகைய நிதி உதவி தெரிவுகள் கிடைக்கும் என்பதை தேசிய மாணவர் கடன் சேவை மையத்துடன் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.