நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.
இந்த விஜயம் கடன் பெறுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல, மாற்று வழிமுறைகள் ஊடாக நாட்டுக்கு தேவையான வெளிநாட்டு கையிருப்பை பெற்றுக் கொள்ள கவனம் செலுத்தப்பட்டுள்ளது என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம்; வாரத்தில் புதிய அரசியலமைப்பிற்கான மூல வரைபும், தேர்தல் முறைமை தொடர்பிலான பாராளுமன்றி தெரிவு குழுவின் அறிக்கையும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]