திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரைகிலோ கேரளா கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் (26) உத்தரவிட்டார்.
ஆனந்தபுரி,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் ஆனந்தபுரி பகுதியில் கேரளா கஞ்சா மரைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அரைகிலோ கேரளா கஞ்சாவுடன் சனிக்கிழமை(25) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை நேற்று(26) திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.