அரச பணியாளர்களை பணிக்கு அழைப்பது குறித்து பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் கடமைக்கு அழைக்குமாறு குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.
அரச பணியாளர்களை நாளை முதல் கடமைக்கு அழைப்பதற்கான பொருத்தமான வேலைத்திட்டம் ஓன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு நிறுவனத் தலைவர்களை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் குறித்த அறிக்கையின் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.