பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேர் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும் நன்றி தெரிவித்தது.
பாராளுமன்றில் இன்று (18) புதன்கிழமை நீதி, நிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ முன்வைத்த சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நன்றியை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுதலை செய்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும் நாம் நன்றி தெரிவிகின்றோம் என்றார்.