தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியே இன்று இடம்பெற்றதாகவும் மற்றும் சில மாற்றங்கள் எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
ஜனாதியதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டதன் பின் வெளியேறுகையில் ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிட்டார். இதன்போது ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.
இன்று இடம்பெற்ற மாற்றங்கள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களின் அமைச்சுக்களிலேயே இடம்பெற்றதாகவும் எதிர்வரும் தினங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களிடையே இடம்பெறும் எனவும் தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து இந்த மறுசீரமைப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.