ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது தொடர்பில் கட்சியின் தீர்மானத்தை எதிர்பார்த்திருந்த எனக்கு, அவரை ஏகமனதாக அறிவித்ததன் பின்னர்தான் சரியாக தூக்கம் சென்றது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்டத்துக்கான ஜனாதிபதி தேர்தல் பிரசார மத்திய நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை எந்தவித சர்ச்சையும் இன்றி கட்சிக்கு நியமித்துக் கொள்ள முடிந்தது. மிகவும் சமாதானமான ஒரு தீர்மானத்தை கட்சி எடுத்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தின் வெற்றிக்கு கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.