ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று (4) மாலை வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு சஜித் பிரேமதாச மற்றும் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக சமல் ராஜபக்ஷ உட்பட 5 பேர் நேற்று (04) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.