முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மட்டுமல்ல, முழு நாடும் விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறை சுயாதீனம் மிகத் தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறிள்ளார்.
இந்த நடவடிக்கை மூலமாக ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.