ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தலைமையில் நீதிபதி அர்ஜுன் ஒபேசேகர, மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று விசாரணை செய்தபோதே நிராகரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பையடுத்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருந்த தடை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.