கல்கி எழுதி அனைத்து தரப்பினரும் விரும்பி படித்த நாவல் பொன்னியின் செல்வன். இந்த வரலாற்று நாவலை தற்போது திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், கீர்த்திசுரேஷ், அமலாபால், சத்யராஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்க இருப்பதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
அதேபோல நடிகர் ஜெயராமும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெயராம், தான் பொன்னியின் செல்வன் படத்தில் தான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறியுள்ளார். அதேசமயம் அந்த கதாபாத்திரம் பற்றி எதுவும் கூற மறுத்துவிட்ட அவர், நிச்சயம் தமிழ் சினிமாவில் தனக்கு மிகச் சிறந்த படமாக இந்தப்படம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.