அவிசாவளை – புவக்பிடிய தமிழ் வித்தியாலயம் மற்றும் ஆரம்ப தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு இன்னும் இரண்டு வாரங்களில் 17 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
அமைச்சர் ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல்21ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு சம்மந்தமாக குறித்த பாடசாலைகளின் மாணவர்களது பெற்றோருடன் எழுந்த முரண்பாடு காரணமாக, அவற்றின் 17 ஆசிரியர்கள் முன்னாள் மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலியினால் வேறு பாடசாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.
இதனை அடுத்து குறித்த பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் ஏற்பட்டிருந்தன.
இதனை தீர்க்க தம்மால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று மேல்மாகாணத்தின் புதிய ஆளுனர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், குறித்த பாடசாலைகளுக்கு 17 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, அமைச்சர் ராதாகிருஷ்ணன், கூறியுள்ளார்.