முன்னாள் பிரதி காவல் துறை மா அதிபர் ஹெக்டர் தர்மசிறி இற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நிதி மோசடி தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த அதேவேளை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007 ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட கட்டுமான பணிக்காக காவற்துறை அலுவலர்களை பயன்படுத்தியதாக தெரிவித்து 2012 ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவினால் வழக்கு தொடரப்பட்டது.
இதில் அவர் குற்றவாளியாக அடையாளம் கானப்பட்ட நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றம் 3 ஆண்டுகால சிறை தண்டனையும் 3 இலட்சம் ரூபாய் அபாராதமும் விதித்து தீர்ப்பளித்தது.