சோபா மற்றும் எக்ஸா உடன்படிக்கைகள் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விளக்கமளிக்க வேண்டும் ஒன்றிணைந்த எதிரணி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கைகளின் கீழ் அமெரிக்க படையினர் வீசா இன்றி இலங்கைக்குள் பிரவேசிக்கவும் அவர்களுக்கான பயணக்கட்டணங்களை அறவிடாது இருக்கவும் சரத்துகள் உள்ளன.
மேலும் இலங்கையில் அமெரிக்க படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களை உள்நாட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது .
இவ்வாறான சரத்துகள் உண்மையில் அந்த உடன்படிக்கைளில் உள்ளனவா, அவை நியாயமானவையா என்பது தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூததரகம் விளக்கமளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.