கண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்க கல்வி அமைச்சினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் குறித்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கண்டி – திகன நகரில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.