உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பாராசக்வார் பகுதியில் வியாழக்கிழமை இரவு, 18 வயது இளம் பெண் ஒருவர் காய்கறிகளை வாங்கிக்கொண்டு இருச்சகர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இளம்பெண்ணை தீ வைத்து கொன்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.