மாசில்லா சுற்றுச்சூழலை உருவாக்க, இலவச பொதுப் போக்குவரத்தை வழங்க திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்பங்கள் வளர்ந்து, வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகள் அதிகரிக்கத் தொடங்கியதால் சுற்றுச்சூழல் மாசுபாடு மிகுதியாகி வருகிறது. ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 8 நாடுகள் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
அதில் வளிமண்டலத்தில் நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் அதன் பகுதிப்பொருட்களின் விகிதம் குறைப்பு விவகாரத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அதில் இலவச பொது போக்குவரத்து குறித்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, சொந்த வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.