இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 20 பேரை விடுதலைச் செய்ய, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர் அனுமதி வழங்கியுள்ளார் என, அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், கைது செய்யப்பட்டுள்ள 20 மீனவர்ளும் விடுதலை செய்யப்படவுள்ளனர் என, அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், எல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில், இந்திய மீனவர்கள் 129 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 109 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். மீதமுள்ள 20 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.