வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க நாம் வெளியே இருந்து ஆதரவு கொடுப்போம்.
இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்தி ரன் தெரிவித்தார்.
உள்ளுராட்சி சபை தேர்தலின் பின்னர் வடக்கு, கிழக்கில் உள்ள பல உள்ளுராட்சி சபைகளில் தொங்கு நிலை காணப்படுகின்றது. எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
வடக்கில் சில சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிர்வாகம் நடத்தத் தெரிவுகளை மேற்கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபைகளில் ஆட்சி அமைக்க ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு வெளியே இருந்து ஆதரவு வழங்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிர்வகிக்கும் சபைகளில் பொதுமக்களுக்கு நன்மையான விடயங்கள் வரும்போது அவற்றை நாம் ஆதரிப்போம். பிழையான விடயங்கள் ஏதாவது வந்தால் நாம் அதனை எதிர்ப்போம்.- என்று அவர் கூறினார்.