கமல் அரசியலுக்கு வந்தாலும் அவரால் ஆட்சி செய்ய முடியாது என்றே ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
நடிகா் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை பிப்ரவரி 21 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து துவக்கினாா். முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய கமல் கட்சியின் பெயரையும், கொடியையும் மதுரை பொதுக் கூட்டத்தில் அன்று அறிமுகம் செய்தாா்.
இந்நிலையில் அவரது அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இது குறித்து ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் சென்னை டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில், ”கமலின் ராசிப்படி அவர் தற்போது சுக்கிர திசையில் இருக்கிறார். அவரின் சுக்கிர திசை வரும் அக்டோபர் 2020 ஆம் ஆண்டோடு நிறைவடைகிறது. ஏற்கனவே அவர் புகழின் உச்சத்தில் இருப்பதால் கிரகத்தின்படி இனி வரும் காலங்களில் அவருக்கு அதிக புகழ் கிடைக்காது.
அவருக்கு இதுவரை கிடைத்த புகழுக்கு முக்கிய காரணமே செவ்வாயின் இருப்பிடம் நன்றாக இருந்ததுதான். தற்போது சுக்கிரன் செவ்வாயின் விட்டில் சஞ்சரிப்பதால் அவரது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் கலந்திருக்கும். கிரகத்தின்படி அவர் நாட்டை ஆள்பவராக இருக்க வாய்ப்பில்லை . 2020 ஆம் ஆண்டு முதல் அவருக்கு சூரிய மகா திசை தொடங்குகிறது. சூரியனும் , சனியும் ஒன்றாக சஞ்சரிப்பதால் அவருக்கு எந்த நன்மைகளும் நடைபெறாது, மேலும் திரைப்பட வாய்ப்புகளும் குறைந்துவிடும் .கமலுக்கு பின்பு அதிகமான மக்கள் ஒன்று கூடினால் அவரால் ஆட்சி செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.