பாகிஸ்தான் ராணுவ எலிகாப்டர் விமானம் ஒன்று எல்லையை தாண்டி 300 மீட்டர் வரை பரந்து வந்தது காஷ்மீர் மாநிலத்தில் பதட்டத்தை உண்டாக்கி உள்ளது.
பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மிரின் எல்லை ஓரத்தில் இன்று காலை சுமார் 9.45 மணி முதல் 10 மணி வரை ஒரு பாக் ராணுவ எலிகாப்டர் விமானம் பறந்துள்ளது. அது எல்லையைத் தாண்டி 300 மீட்டர் உள்ளே பறந்து வந்துள்ளது. இந்த நிகழ்வின் போது துப்பாக்கி சூடு போன்ற எந்த ஒரு சம்பவமும் நிகழவில்லை என தெரிய வந்துள்ளது.
எல்லை விதிகளின் படி வானூர்திகள் எதுவும் ஒரு கிலோமீட்டர் தூரத்தை தாண்டி பறந்து வரக்கூடாது என்பதால் இது விதிமீறல் எனக் கொள்ள முடியாது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிறகு அந்த எலிகாப்டர் திரும்பிச் சென்றுள்ளது. இது விதி மீறல் இல்லை என்றாலும் புரிதல் ஒப்பந்தத்தை மீறிய செயல் என பாக் அரசுக்கு இந்திய ராணுவம் தகவல் அனுப்பி உள்ளது.
இந்நிகழ்வினால் காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பதட்டம் உண்டாகி இருக்கிறது.