கோழி போன்று முட்டையிடும் அதிசய சிறுவன் பரிசோதனை செய்த நம்பமுடியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் குவாபகுதியைச் சேர்ந்தவர் அக்மல் என்ற 14 வயதுடைய சிறுவன், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் முட்டையிட்டு வருகின்றான் என்று பெற்றோர் கூறுகின்றனர்.
இது குறித்து அக்மலின் தந்தை கூறுகையில், ”அக்மல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து முட்டையிட்டு வருகிறான், நாங்கள் பலமுறை மருத்துவமனைக்கு சென்றுள்ளோம். மருத்துவமனைக்கு வந்த பின் அவன் இரண்டு முட்டைகள் போட்டான். கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 முட்டையிட்டிருக்கிறான், அதை நான் உடைத்து பார்த்த போது மஞ்சள் நிறத்தில் இருந்தது” என்றார்.
ஆனால் மருத்துவர்களோ இது நிச்சயமாக இருக்க முடியாது, மனிதன் உடலில் முட்டை இருப்பதற்கு வாய்ப்பே இல்லை, மருத்துவமனையில் முட்டை போட்டதாக கூறுகின்றனர். நாங்கள் அதை நேரடியாக பார்க்கவே இல்லை என்று கூறுகின்றனர்.மேலும் மருத்துவர்கள் மாணவனை முழுமையாகப் பரிசோதனை செய்து வருகின்றனர். சரியான தகவலை அவர்கள் இன்னமும் வெளியிடவில்லை.