பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட அமரி விஜேவர்தனவின் பதவிக்காலம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ள நிலையிலேயே அவர் பதவி விலகல் குறித்து அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் சைகை விடுத்து சர்ச்சையில் சிக்கிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு பிரித்தானியாவில் நெருக்கடி ஏற்பட்டுள்ள தருணத்தில் உயர்ஸ்தானிகர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.