காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட்டுவாகல் பாலத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.
வட்டுவாகல் கடற்படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை இன்று நில அளவீடு செய்யவிருந்த நிலையில் அவற்றை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச அதிகாரிகள் இணக்கத்துக்கு வர முயன்ற போதும் போராட்டத்தை கைவிடாத மக்கள் வீதியில் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில், போராட்டக்காரர்களை கலைந்து போக வைப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் வாகனம் போராட்டக்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டது.