பெஷாவர், பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் கல்லுாரியில் தலிபான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பெஷாவர் நகரில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் பெஷாவரில் உள்ள விவசாய பயிற்சி கல்லுாரியில் உள்ளூர் நேரப்படி காலை 8:௦௦ மணிக்கு 3 பயங்கரவாதிகள் பர்தா அணிந்தவாறு ஆட்டோவில் வந்து
இறங்கினர்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை சுட்டுக்கொன்றுவிட்டு விடுதிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அங்கிருந்த மாணவர்கள் நாலா புறமும் ஓடினர். ஆனால் பயங்கரவாதிகள் துப்பாக்கியால்
சுடுவதை நிறுத்தவில்லை.இந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு வந்தனர். அவர்கள் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 8 மாணவர்கள், ஒரு ஊழியர் என 9 பேர் பலியாயினர். ௩௬ பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் 3 பேரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டனர்.