“படம் இயக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். அதற்கு முன்பு இயக்கம் பற்றி கற்றுக் கொள்வதற்காக 17 குறும்படங்களை இயக்கினேன். படம் இயக்க முடிவு செய்த பிறகு கதை எழுதினேன்.
`ப.பாண்டி’ திரைக்கதையை எழுதி முடித்த பிறகு நாயகனாக நடிக்க பாண்டி கிடைக்கவில்லை. அந்த கதாபாத்திரத்துக்கு ஒருவரை தேர்ந்து எடுப்பது கடினமாக இருந்தது. ‘வடசென்னை’ படப்பிடிப்பில் இருந்த போது ராஜ்கிரண் நினைவு வந்தது. அவரைத்தவிர வேறு யாராலும் பாண்டியாக நடிக்க முடியாது என்று தோன்றியது.
ரேவதி மேடம் படங்களில் நடிக்காமல் இருந்தார். என்றாலும், என் படத்தில் நடிக்க சம்மதித்தார். எனக்காக அவர் நடிக்கவில்லை. கதை மிகவும் பிடித்ததால் நடித்தார். ‘ப.பாண்டி-2’ எடுக்கும் திட்டம் இருக்கிறது. ஆனால் அது எப்போது நடக்கும் என்பது எனக்கு தெரியாது. மீண்டும் படம் இயக்க நான் அவசரப் படவில்லை” என்றார்.