நீங்கள் கேட்கும் கேள்வி ரொம்ப தப்பா இருக்கு – பத்திரிகையாளர் முன்பு கொந்தளித்த ராகவா லாரன்ஸ்
இன்று நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து ஜல்லிக்கட்டு வெற்றியை பகிர்ந்து கொண்டார். அதுமட்டுமில்லாமல் தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு வரத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சில பத்திரிகையாளர்கள் ராகவா லாரன்ஸிடம் கோபப்படும்படியான சில கேள்விகளை கேட்க தொடங்கினர்.
சிறிது நேரம் பொறுத்து பார்த்த லாரன்ஸ் திடிரென்று பத்திரிகையாளர்கள் முன்னாடி கொந்தளித்தார். இந்த போராட்டத்துக்காக இளைஞர்களுடன் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் தெரியுமா, என் மனைவி, அம்மா செயினை அடகு வெச்சு போராட்டம் நடத்திருக்கிறேன்.
கிட்டத்தட்ட 10 வருஷமா பல நல்ல விஷயங்களை செய்து வருகிறேன். நீங்கள் கேட்கும் கேள்வியெல்லாம் ரொம்ப தப்பாக இருக்கிறது என்று கோபப்பட்டு பேசினார்.