பிரான்சில் 50 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: அதிர வைக்கும் விபத்திற்கான காரணம்
பிரான்சில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
La Roche-sur-Yon, Sables-d’Olonne இடையேயான A87 நெடுஞ்சாலையிலே இந்த பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
கார், லொறி, வேன் என 50 வாகனங்கள் மோதிக்கொண்டதில் 5 போர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடும் மூடுபனியில் வாகன ஓட்டிகள் வாகனத்தை மிக வேகமாக இயக்கியதே விபத்திற்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் A87 நெடுஞ்சாலையில் மூடப்பட்டுள்ளது.