சபர்ணா தற்கொலையை தொடர்ந்து மீண்டும் நடிகை ஜெயஸ்ரீ கொலை?
நடிகைகள் அடுத்தடுத்து பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பலரையும் அதிர்ச்சி ஆக்கியுள்ளது.
சமீபத்தில் தான் தொலைக்காட்சி நடிகை சபர்ணா சென்னையில் உள்ள தனது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் வசித்து வந்தவர் ஜெயஸ்ரீ. இவர் துணை நடிகையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது வீட்டில் பிணமாகக் கிடந்ததை போலீசார் இன்று கண்டுபிடித்து விசாரித்து வருகிறார்கள்.
அவரது உடலைபிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயஸ்ரீ கொலை செய்யப்பட்டாரா என்று வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.