சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
77ஆவது சுதந்திர தினமான இன்று ஜனாதிபதியினது பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.