கொழும்பு பிரதான வீதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்று விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பரிசோதகர் தனது கடமைகளை நிறைவுசெய்த பின் இன்று புதன்கிழமை (29) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன்போது, கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் நின்ற நபரை செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளால் மோதி காயப்படுத்தியதோடு, முச்சக்கரவண்டி ஒன்றின் மீதும் மோதியுள்ளார்.
இந்நிலையில் பொலிஸ் பரிசோதகர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, பரிசோதனையில் பொலிஸ் பரிசோதகர் மது அருந்தி இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.