விஜய் பட ஷூட்டிங்கில் கொடூர விபத்து, மாயமான நடிகர்கள், இறந்தார்களா, காணாமல் போனார்களா?
கர்நாடகாவில் இன்று காலை 11 மணியளவில் ராம் நகர், திப்பகொண்டனஹள்ளி பகுதில் ஷூட்டிங் பரபப்பாக நடந்து கொண்டிருந்தது.
இந்த படத்தில் துனியா விஜய் என்ற நடிகரும் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் இருவர் ஹெலிகாப்டரில் இருந்து அங்குள்ள ஏரியில் குத்திப்பது போல காட்சிகள் எடுக்கப்பட்டு கொண்டிருந்தது.
நடிகரோடு சேர்ந்து, ஸ்டண்ட் கலைஞர்களும் ஏரியில் குதித்தனர். இதில் விஜய் கரையை அடைந்து விட மற்ற இருவரும் நீரில் தத்தளித்தனர். அவசர உதவி படகு பழுதானதால் வெகு நேரமாகியும் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை.
இதனால் தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் என்ன ஆனார்கள் என கேள்வியாகியுள்ளது.
சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.