மதுபோதையில் விமானத்தை செலுத்த இருந்த 2 விமானிகள்: அதிரடியாக கைது செய்த நிர்வாகம்
அமெரிக்க ஏர்லைன்சுக்கு சொந்தமான UA162 என்ற விமானம் 141 பயணிகளுடன் ஸ்காட்லாந்து கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் நியூஜெர்சிக்கு நேற்று காலை 9 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.
இந்த விமானத்தை செலுத்த வந்த இரண்டு விமானிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை தனியாக அழைத்து விசாரணை செய்ததில் இருவரும் மது அருந்தியது தெரியவந்தது. இதனால் அவர்களை விமான நிலைய பொலிசார் கைது செய்தனர்.
இதனையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. விமானிகள் கைதானதால் மாற்று விமானிகள் மூலம் குறிப்பிட்ட விமானத்தில் செல்லவிருந்த பயணிகள் மாலை அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
கடந்த ஜூலை மாதம் இதுபோன்று கனடாவைச் சேர்ந்த இரண்டு விமானிகள் மது அருந்தியது தெரியவந்தது. இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்து ஜாமீன் வழங்கப்பட்டது.
ஸ்காட்லாந்தின் ரெயில்வே மற்றும் போக்குவரத்து சட்டத்தின்படி, அதை இயக்கும் நபர்களின் ரத்தம் அல்லது சிறுநீர் சோதனையில் அவர்கள் மது அருந்தியது தெரியவந்தால், அவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.