ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு போட்டியாக அல்-காயிதா இலங்கையிலுமா?
இலங்கையிலும் தென்னிந்தியாவில் இருந்தும் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள அல்-காயிதா இயக்கம் முயற்சிப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது
தெஏசியன் ஏஜ் செய்தித்தாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது
ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு போட்டியாக அல்-காயிதா இயக்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது
இதன் கீழ் தமது பிரசாரங்களை அல்-காயிதா இயக்கம், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளது.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட உலக இஸ்லாமிய ஊடக முன்னணி, இந்த மொழிப்பெயர்ப்புக்களை செய்துள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாகவே அல்-காயிதா இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்கிறது.
இதற்காக தமிழ் அன்சார் மற்றும் ஒலிவின் சரத்து போன்ற சமூக இணையப்பக்கங்கள் திறக்கப்பட்டுள்ளன.
‘சிரியா துரூ இந்தியன் ஐஎஸ் என்ற இணைப்பக்கமும் அல்-காயிதாவின் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
இந்த மொழிப்பெயர்ப்புக்களுக்கு பெரும்பாலும் அல்-காயிதாவில் இணைந்துள்ள தென்னிந்தியாவை சேர்ந்தவர்களே உதவியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.