மயங்கி வீழ்ந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார். ஆறு, ஏழு நாள்களாக தொடர்ச்சியாக உணவு உட்கொள்வதைக் குறைத்து அதிக மது அருந்தினார் என்று தெரிவிக்கப்பட்டது.
குப்பிளான் தெற்கு, குப்பிளானைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணை ஒன்றில் மயங்கி வீழ்ந்த நிலையிலேயே அவர் மீட்கப்பட்டார். அவர் உறவினர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணத்துக்காக உடற்கூற்றுப் பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பான இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் இறப்பு விசாரணை அதிகாரி பிரேம குமார் மேற்கொண்டார்.