14 வருடத்திற்கு பிறகு கௌதமி எடுத்த முடிவு?
நடிகை கௌதமி கமல்ஹாசனை பிரிந்த பிறகு தனது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
தனது மகள் சுப்புலட்சுமியை ஹீரோயினாக்கவும் முயற்சி செய்து வருகிறார். கடந்த 2003க்கு பிறகு மலையாள படங்களில் நடிக்காமல் இருந்த கௌதமி தற்போது 14 வருடத்திற்கு பிறகு நடிக்கவுள்ளார்.
பிடி குஞ்சு முகமது இயக்கும் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் மாடர்ன் அம்மாவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
மலையாள படத்தில் கௌதமி பாத்திமா பீவி என்ற முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறார். மன்சூராக நடிக்கும் ஹீரோ ரோஷன் மேத்யூவுக்கு அம்மாவாக நடிக்கிறார் கவுதமி.
கதைப்படி கௌதமியும் அவரது மகனும் பாசக்காரர்கள். ஒரு தாயும், மகளும் அவர்களின் வாழ்வில் வரும்போது எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படுகிறதாம்.