12 வயது சிறுமியை கூட்டாக வல்லுறவு! தலைமறைவான பிக்குவும் கைது
மாத்தறை பிரதேசத்தில் 12 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு இராணுவ வீரரும், சந்தேக நபர்களுக்கு அறையை வாடகைக்கு வழங்கிய நபரும் ஒரு பிக்குவும் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிக்கு வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
12 வயதான தமது மகள் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் கடந்த ஜூன் 10 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர்.
மாத்தறை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்ட தேடுதலை அடுத்து கடந்த 21ம் திகதி இந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் 9 பேர் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதுடன் மறுதினம் மற்றுமொரு வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பலரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர்கள் சிறுமியை விடுத்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் தாய் அடிக்கடி செல்லும் விகாரைக்கு சிறுமி சென்றுள்ளார்.
விகாரைக்கு சென்ற சிறுமியை பிக்கு ஒருவர் அறைக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து பிக்கு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பிக்குவையும் கைது செய்துள்ளனர்