பொரளை டீ 20 தோட்டப்பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பொரளை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபர் எனவும் அவரிடமிருந்து 05 கிராம் 40 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்