வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுவில் இடம்பெற்ற வேட்பாளர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சந்திராவனி என்பவரே இவ்வாறு கட்சி மாறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் பி.கருணாதாஸ முன்னிலையில் இவர் அக்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.