விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்க வேண்டும்! புலிகளின் வியூகம்?
ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் ஹமாஸ் இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் இந்த தடையை நீக்குவது தொடர்பாக இலங்கை மற்றும் இஸ்ரேல் நாடுகளிடம் ஐரோப்பிய யூனியன் கருத்து கேட்டிருந்தது.
இதற்கமைய இலங்கை மற்றும் இஸ்ரேல் நாடுகள் இந்த தடையை நீக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால் இந்த எதிர்ப்பையும் மீறி இரு இயக்கங்கள் மீதான தடையை நீக்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
அப்படி அதிகாரப்பூர்வமாக தடை நீக்கப்பட்டால் 2009ஆம் ஆண்டு யுத்த தோல்விக்குப் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு கிடைத்திருக்கும் முதலாவது ராஜதந்திர வெற்றி இதுவாகும் என்று இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சொத்துகள் அனைத்தும் மீட்கப்படும், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுதந்திரமாக பயணம் மேற்கொள்ள முடியும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கத்துக்குப் பின்னர் இதேபோல் இந்தியாவிலும் தடையை நீக்க கோரி பிரசாரங்களையும் லாபிகளையும் மேற்கொள்ள விடுதலைப் புலிகள் இயக்கம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தடை நீக்கப்படுவதன் மூலம் தனி தமிழீழத்துக்கான அரசியல் நகர்வுகள் வலிமையடையும் என்பதுதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.