ஆஸ்திரேலியா நாட்டின் துணை பிரதமரும் தேசிய கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தவர் பார்னபி ஜாய்ஸ். இவர் தனது பெண் ஊழியர் ஒருவருடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக கடந்த மாதம் குற்றச்சாட்டுக்கள் எழுந்தனர். தொடர்ந்து எதிர்க்கட்சியினரும், பத்திரிகையாளர்களும் கேள்வி மேல் கேள்வி கேட்க தொடங்கினர்.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை பார்னபி ஜாய்ஸ், தனிப்பட்ட காரணங்களால் தனது துணை பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
மேலும், தேசியக் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் அவர் ராஜினமா செய்ய உள்ளார்.
ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம், இரட்டைக் குடியுரிமை விவகாரம் தொடர்பாக பார்னபி ஜாய்ஸ் தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.