இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது பல்வேறு சினிமா ஜாம்பவான்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது அரசு சார்பில் வழங்கப்படும் ஒரு விருது. இதுவரை அந்த விருதை சிவாஜி கணேசன், கே.பாலசந்தர் போன்றவர்கள் வாங்கியுள்ளனர்.
அத்தகைய உயரிய விருதை பிரியங்கா சோப்ரா விரைவில் பெறவுள்ளார். அவருக்காகவே தாதாசாகேப் பால்கே விருது கமிட்டி ‘சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகை’ என்ற பிரிவை கொண்டுவந்துள்ளது.
பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் சர்வதேச புகழ் பெற்றுள்ளார் பிரியங்கா சோப்ரா. அந்த படம் ஜூன் 2ம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.