முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மறுத்த அமெரிக்க மருத்துவக்குழு!!
வடக்கு மாகாண முதலமைச்சர் இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப்பிடம் விடயம் சம்பந்தமாக முதலில் கேட்ட போது, அவர் அதற்கு விருப்பம் வெளியிட்டிருந்ததாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
மாகாண சபையில் இந்த விடயம் தொடர்பாக பேசிய முதலமைச்சர், அமெரிக்க தூதுவர் இணங்கியதாக கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க மருத்துவ குழுவினர் யாழ்ப்பாணம் இடைக்காடு பகுதிக்கு வந்து மருத்துவ பணிகளை ஆரம்பித்த போது, தான் புனர்வாழ்வு பயிற்சி பெற்ற புலிகளின் உறுப்பினர்கள் சிலரை , நேற்று முதலமைச்சரின் செயலாளர் ஊடாக, அமெரிக்க மருத்துவ குழுவிடம் அழைத்து சென்றதாகவும் அவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்ய மறுத்து விட்டதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
மறுப்புக்கான காரணத்தை கேட்ட போது, தம்மிடம் மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான வசதிகளை இல்லை என மாத்திரம் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை எப்படியாவது பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையை வடக்கு மாகாண சபை மேற்கொள்ளும்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆரம்பித்துளள இந்த வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் எனவும் தேவையேற்பட்டால் அதற்கு உதவ வெளிநாடுகள் தயாராக இருப்பதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.