முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு தமிழகம் மற்றும் தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கள் தெரிவித்துள்ளார். அவரது மறைவில் மிகவும் வருத்தம் கொள்வதாகவும் இந்திய அரசியலில் வெற்றிடத்தை உருவாக்கிச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Deeply saddened at the passing away of Selvi Jayalalithaa. Her demise has left a huge void in Indian politics.
I will always cherish the innumerable occasions when I had the opportunity to interact with Jayalalithaa ji. May her soul rest in peace.
தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
சிறந்த தலைவரை இழந்துவிட்டோம் என தனது டுவிட்டரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பதிவு செய்துள்ளார்.
We lost a great leader today.Women,farmers,fishermen &the marginalised dreamt through her eyes.We will miss Jayalalithaa ji,Amma to millions
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றியவர் முதல்வர் ஜெயலலிதா என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Saddened by the demise of Tamil Nadu CM J.Jayalalithaa ji. I extend my deepest condolences to her party and followers in this hour of grief.
ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பேனர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் இரங்கல் பதிவிட்டுள்ளார்.
வலுவான, தைரியமான, திறமையான, மக்களின நண்பராக, கவர்ந்திழுக்கும் தலைவர் தான்
அம்மா. (1/3)
எப்போதும் மக்கள் இதயத்தில். இது மிக பெரிய இழப்பு. எனக்கு அதிர்ச்சியாமாகவும் வருத்தமாகவும் இருக்கு. (2/3)
தைரியம் மற்றும் பெருந்தன்மை உடன், இந்த பெரிய இழப்பை எதிர்கொள்ள தமிழக மக்களுக்கும், அதிமுக தொன்டர்களுக்கும் வேண்டுகிறேன் (3/3)