பாலியல் புகார்களை வெளிக்கொண்டு வரும் MeeToo விவகாரம் இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் இதை ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில் MeeToo குறித்து நடிகை காஜல் அகர்வால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது :
தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறி வரும் பெண்களை பாராட்டுகிறேன். அவர்களுக்கு நான் என்றும் துணை நிற்பேன். பெண்கள் ஒவ்வொருவரும் தோனை காலங்களில் நாம் காப்பாற்றி கொள்வதற்காக துணை நிற்பதோடு, உண்மையாகவும் இருக்க வேண்டும். அதேசமயம், இதை வைத்து பெண்கள் யாரும் விளம்பரத்துக்காக சேற்றை வாரி இறைத்து கொள்ள வேண்டாம்.
இவ்வாறு கூறியிருக்கிறார்.