டுபாயில் மறைந்திருந்து கொண்டு மாகந்துரே மதூஸினால் முன்னெடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முக்கிய குற்றச் செயல்கள் 4 தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
டுபாயிலிருந்து இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ள மதூஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளின் போது இந்த நாட்டுக்குள் அவரினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய குற்றச் செயல்கள் 4 தொடர்பில் தற்பொழுது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2017 பெப்ரவரி 27 ஆம் திகதி களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, கடந்த 2017 மே மாதம் 09 ஆம் திகதி பிலியந்தலை நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, கடந்த 2018 மார்ச் 06 ஆம் திகதி அங்குனுகொலபெலஸ்ஸ இடம்பெற்ற கொலைச் சம்பவம், கடந்த 208 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி இடம்பெற்ற மாணிக்கக் கல் கொள்ளைச் சம்பவம் என்பன தொடர்பிலேயே இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.