பாராளுமன்றத்தை கலைத்து புதிய பிரதமரை தெரிவு செய்யுங்கள் . இனியும் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றித்து தேசிய அரசாங்கத்தில் பயணிப்பது , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அவமானமாகும். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிர் கட்சி வலியுறுத்தியுள்ளது .
பொரெல்லை – ஸ்ரீ வஜிராஸ்ரராம விகாரையில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.