பிரித்தானியாவின் சால்போர்டு பல்கலைக் கழகத்தில் மர்ம பை ஒன்று இருந்துள்ளதால், கல்லூரியில் உள்ள மாணவர்கள் அவசர அவரசமாக வெளியேற்றப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள Salford பல்கலைக் கழகத்தில் உள்ள நூலகத்தின் அருகில் மர்ம பை ஒன்று இருந்துள்ளது.
இதனால் அங்குள்ள கட்டிடங்களான New Adelphi, Lady Hale மற்றும் Clifford Whitworth நூலகத்தில் உள்ள மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தை அறிந்த பொலிசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இதை பொலிசாரும் உறுதி செய்துள்ளதாகவும், இதன் காரணமாக மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவர் ஒருவர் மர்ம பை காரணமாகவே அனைவரும் வெளியேற்றப்பட்டு வருவதாக டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.
நேற்று தான் பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் உள்ள மான்செஸ்டர் அரென அரங்கில் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலால் 22 பேர் பலியாகினர் மற்றும் 119 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சமயத்தில் இப்படி ஒரு மர்ம பை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.